Protected: Kavirimainthan Kavirimainthan

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

.

நீதிமன்றங்களுக்கு உள்ளே நிகழ்வதை விமரிசிக்கக் கூடாது.
அந்த தவற்றை நாம் செய்ய மாட்டோம்.

கீழே இருக்கும் விஷயம் – மன்றத்திற்கு வெளியே,
ஒரு பிரிவு உபசாரக் கூட்டத்தில் நிகழ்ந்தது –
செய்தியாக வெளிவந்தது –
ஆகையால் நாம் அது குறித்து பேசலாமென்று நினைக்கிறேன்.
(ஹிந்து கர்நாடகா பதிப்பில் வந்த செய்தி கீழே )
இருந்தாலும் யாருடைய பெயரையும் குறிக்காமலே பேசுவோம்…!

ஒரு நீதிபதி பதவி ஓய்வு பெற்று போகிறார்.
அந்த நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் –
பிரிவு உபசாரக் கூட்டத்தில் –
கவலைப்பட்டு, வருத்தப்பட்டு, குறைப்பட்டு பேசுகிறார் –
யாரைப் பற்றி கவலை, வருத்தம், குறைகள் ….?

பதவி ஓய்வு பெற்று போகிறவர் -போவதற்கு முன்னர்,
நியாயமாக தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றிருக்க
வேண்டுமாம். உச்சநீதிமன்றத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் –
அவருக்கு பதவி உயர்வு கொடுக்காமல் –
அநீதி இழைத்து விட்டார்களாம்…

அதற்கான காரணமாகச் சொல்லப்படுவது –
ஓய்வு பெறுபவரின் மீது
சில புகார்கள் கூறப்பட்டிருந்தனவாம்.
அந்த புகாரை விசாரிப்பதில் உச்சநீதிமன்றம் 10 மாதங்கள்
கால தாமதம் செய்து விட்டதாம்.
அதனால், பதவி உயர்வு பெறாமலே
அவர் ஓய்வு பெறுகிறாராம்.

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையே. இப்படி இருந்தால் நீதிபதி
வேலைக்கு இந்த நாட்டில் யார் வருவார்கள்
என்று வருத்தப்படுகிறார் தலை.

தங்களில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம்
ஏற்பட்டதற்கு இவ்வளவு வருத்தப்படுபவர்கள் – இந்த நாட்டின்
நீதிமன்றங்களில்…

View original post 595 more words